இலங்கையின் நட்பு நாடுகள் என்று கூறிக் கொள்ளும் நாடுகள், அவ்வாறு செயற்படுவதற்கான நேரம் வந்து விட்டதாக, வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் எங்கள் வாதங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப ஒரு ஒருமித்த தீர்மானமாக இருந்தால், அது சாதகமான ஒன்றாகும்.
அத்தகைய தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கமாட்டோம்.
சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் எமது சிறந்த நண்பர்கள் என்று கூறுகின்றன.
எங்களுடன் இணைந்து நிற்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய நேரம் இது.
இது குறித்த கலந்துரையாடல்களை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை.
நாங்கள் விரைவில் அவர்களுடன் பேசுவோம், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் ஆதரவைப் பெறப்போகிறோம்.
அவர்களுடன் சேர்ந்து, எமது குரலைக் கொண்டிருந்தால் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தினால் மட்டுமே அது ஒருமித்த தீர்மானமாக இருக்கும். .” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.