ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பொருத்தமானவர் இருந்தால், அந்த பதவியை அவருக்கு வழங்குவது தொடர்பில் தமக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தமக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.எனினும் அந்த பதவியை வேறொருவருக்கு வழங்குவதை தாம் எதிர்க்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவராகவும், செயற்குழுவின் உறுப்பினராகவும் தாம் தொடர்ந்தும் கடமையாற்றுவதாகவும் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.