அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பவ்யா லால், கடந்த 2005 முதல் 2020ம் ஆண்டு வரை பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை மையத்தின் ஆராய்ச்சி ஊழியராக பணியாற்றி வந்தவர் என்று கூறப்படுகிறது.
பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற பவ்யா லால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை தொடர்பான வெள்ளை மாளிகை அலுவலகத்தில், விண்வெளி தொழில்நுட்பம், கொள்கை உள்ளிட்ட துறைகளில் தலைமை பொறுப்பை வகித்து வந்துள்ளார்.
ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்திய- அமெரிக்கர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இவரது நியமனமும் இடம்பெற்றுள்ளது.