முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கான மரண தண்டனைக்கு எதிரான மனு விசாரணைக்கு

359

நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி முதல் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

அது தொடர்பிலான சட்டமா அதிபரின் வியாக்கியானத்தை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தடன், எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி எழுத்து மூல வியாக்கியானத்தை தாக்கல் செய்யுமாறு முறைப்பாட்டாளர் தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 31ஆம் திகதி பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *