நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்பட்டால், உங்களை போன்றவர்களையே கைது செய்ய வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை பார்த்து பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலேயே அவர் இவ்வாறு பகிரங்கமான முறையில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
“தமிழ் பிள்ளைகளின் மனங்களை மாற்றும் வேலைகளை செய்யும் நடவடிக்கைகளுக்கு, சாள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போல, தமிழ் இனப்படுகொலை எங்கு நடந்தது?
தமிழ் மக்களில் 52 வீதமானவர்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியில் சிங்கள சமூகத்துடன் இணைந்து வாழ்கின்றனர்.
தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றால், அவ்வாறு சிங்கள மக்களுடன் வாழ முடியுமா? என்றும் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.