தொற்று நோய்களின் போது செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கும் உத்தரவொன்றை பிறப்பிப்பது தொடர்பான முன்மொழிவு வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபில் செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ளதோடு அதனை சபையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளனர்.
பொதுமக்களை மையப்படுத்தி சட்டங்கள் அமுலாக்கப்படுகின்றபோதும் அவர்களின் ஆணை பெற்றவர்கள் கட்டப்பாடுகளை மீறுவதை தடை செய்யும் வகையில் இந்த ஏற்பாடு அமையலாம் என்று அதில் கையொப்பமிட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.