ரொரண்டோவின் அனைத்துப் பாடசலைகளும் நாளை புதன்கிழமை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18ஆம் திகதி வரையில் இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ரொரண்டோவின் பொதுசுகாதாரப் பிரிவினர் இந்த அறிவிப்பினை உத்தியோக பூர்வமாக விடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் ரொரண்டோவின் கணிசமான பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொரண்டோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமையாலேயே இவ்வாறான அறிவிப்பு விடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பொதுசுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.