முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கனேடிய பிரதமர் இரங்கல் வெளியிட்டுள்ளார்

545

நியூ பிரவுன்ஸ்விக்கின் தலைநகர் ஃபிரெக்ட்றிக்சனின்(Fredericton) வட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்குள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் இன்று காலை ஏழு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்களுக்கு வேறு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை அங்குள்ள மருத்துவமனையில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், துல்லியமான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவிலலை.

எனினும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் பலத்த காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருவததனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள் தொடர்பிலும் அடையாளம் வெளியிட்டுள்ள அதிகாரிகள், ஒருவர் கான்ஸ்டபிள் றொப் கோஸ்டெல்லோ எனவும் மற்றையவர் கான்ஸ்டபிள் சாரா பேர்ன்ஸ் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த இரண்டு பொதுமக்களில் ஒருவர் ஆண் எனவும் மற்றையவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களது பெயர் வயது உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவிலலை.

இதேவேளை காலை சுமார் 7:07இலிருந்து 8:30க்குள் சுமார் 20 துப்பாக்கிச் சத்தங்கள் தனது வீட்டின் அருகே கேடடதாக அந்த பகுதியில் வதியும் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *