பாரிய மற்றும் ஆபத்தான குற்றங்களை இழைத்தவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமைக்காக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சங்கா (Ramesh Sangh) பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
லிபரல் கட்சியின் தலைவரும், பிரதமருமான ஜஸ்டின் ரூடோ இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான விசாரணைகள் மற்றும் சான்றாதாரங்களின் அடிப்படையில் இவ்விதமான தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரூடோவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் தொடரப்படுவதற்கு லிபரல் கட்சி பரிந்துரைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர் 2015ஆம் ஆண்டிலிருந்து பிரம்டன் மத்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.