கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களால், ஒன்ராறியோவில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கு, முதல் முறை தடுப்பு மருந்தை வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் அனைவரும் பிப்ரவரி 5 ஆம் நாளுக்குள் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற முடியும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட காலத்தை விட 10 நாட்கள் வரை தாமதம் ஏற்படும் என்று மாகாண அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.