கனடிய பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒருமாதத்திற்கு முன்னதாக வெளியாகும் வரையில் தாம் அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
கனடிய பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் மீதூன பாலியல் குற்றச்சாட்டுச் சம்பவங்களை பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தவறாக கையாண்டதாக அரச குறைகேள் அதிகாரியிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருத்து வெளியிட்ட பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் தனது அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு அமைச்சர் மீது தாம் அதீத நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் இராணுவ குறைகேள் அதிகாரியான கேரி வால்போர்ன், மூன்று வருடங்களுக்கு முன்னர் தனியார் நிகழ்வொன்றில் பாதுகாப்பு அமைச்சரை எச்சரித்தமையால் பாதிக்கப்பட்ட இராணுவப் பெண்கள் கவலை கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.