பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் அடுத்தவார முற்பகுதியில் கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவரான, பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, மாணவர்களின் விடுதி பயன்பாடு, சுகாதார பாதுகாப்பு, விரிவுரையாளர்களின் சுகாதார பாதுகாப்பு என்பன தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, விரைவான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்