ஒன்ராறியோவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள், வழக்கமான வகுப்பறை கல்வியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து, கடந்த ஆண்டு பாடசாலைகள் அனைத்தும் இணையவழி வகுப்புகளை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
எனினும், தற்போது கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், செப்ரெம்பரில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் போது, நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
லண்டன் ஒன்ராறியோ மேற்குப் பல்கலைக்கழகம், அடுத்த தவணை ஆரம்பிக்கும் போது, நேரடி வகுப்புகளை தொடங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கான திட்டங்கள் குறித்து தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக குறித்த பல்கலைக்கழகத்தின் தலைவர் அலன் ஷெப்பார்ட் (Alan Shepard ) தெரிவித்துள்ளார்.