விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடாத்தியுள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லிக்குச் சென்ற விவசாயிகள் இன்று திடீரென தொடரூந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் கலைந்து போக செய்துள்ளனர்.
எனினும் இன்றும், நாளையும் ராம்லீலா மைதானத்தில் திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள அவர்கள், மீண்டும் ஒன்று கூடி போராட்டதைத் தொடங்கியுள்ளனர்.