பசறை – 13ஆம் கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற பாரவூர்தியின் சாரதியை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்து இடம்பெறும் போது பேருந்திற்கே எதிரே பயணித்த குறித்த பாரவூர்தி பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் குறித்த விபத்தில் மரணித்தவர்களில், ஒருவரின் சடலத்தை அடையாளம் காண முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மோட்டார் வாகன பரிசோதர்களை பயன்படுத்தி விபத்திற்குள்ளான பேருந்தின் தொழில்நுட்பம் தொடர்பில் பரிசோதிக்க எதிர்பார்த்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
விபத்தில் சாரதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் பேருந்தை வழமையான சாரதி பேருந்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.