முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள்

305

பாலஸ்தீன பிராந்தியங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குத்தொடுநரே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை, கிழக்கு ஜெரூசலேம், காசா பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியங்களில் 2014ஆம் ஆண்டில் இருந்து இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறும் என்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குத்தொடுநர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன பிரதேசங்கள் மீது தனது குற்றவியல் அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியும் என்று ஹேக்கில் (Hague) உள்ள சர்வதேச குற்றவியல்  நீதிமன்றம்,  கடந்த மாதம்,  தீர்ப்பளித்திருந்தது.

இதன் அடிப்படையிலேயே விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனை பாலஸ்தீன தலைவர்கள் வரவேற்றுள்ள அதேவேளை, இஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *