முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிராந்தியத்தின் நிலைமை குறித்து கூட்டு விசாரணை எதியோப்பியா அழைப்பு

241

பிராந்தியத்தின் நிலைமை குறித்து கூட்டு விசாரணை நடத்த முன்வருமாறு எதியோப்பியா விடுத்த வேண்டுகோளுக்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசேல் பச்லெட் (Michelle Bachelet) இணக்கம் தெரிவித்துள்ளார்.

ரிக்ரே பிராந்தியத்தில் பொதுமக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டதாகவும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, எதியோப்பிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து ஐ.நா செயற்படவுள்ளது.

இதுதொடர்பான குழுவொன்றை விரைவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.

ரிக்ரே பிராந்தியத்தில் இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில், எதியோப்பியா அதனை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *