முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சர்க்கோசி ஊழல் வழக்கில் குற்றவாளி

183

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சர்க்கோசி (Nicolas Sarkozy) ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசி (Sarkozy) தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் 2012ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த சர்க்கோசி, தேர்தல் பிரசார நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார்.

இந்தநிலையில், ஒரு மூத்த நீதிபதி ஊடாக சட்டவிரோதமாக விசாரணை தகவல்களை பெற முயன்றார் என்ற குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிபதி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் இலஞ்சம் வழங்க முற்பட்டதாகவும், சர்க்கோசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 66 வயதான சர்க்கோசிக்கு (Sarkozy) தண்டனை வழங்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *