3ம் ஆண்டு நினைவு வணக்கம்- 03.04.2018💐💐💐
பிரான்ஸ் தமிழீழ மக்களின் வெள்ளை தாய் ( பவுல் லுயிய் வியோலெத்) ( ‘Mme. Paula Lugi Violette) நினைவு வணக்கம்
ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த பிரான்சு ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் .
நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு கால நேரம் பார்க்காமல் முதல் ஆளாய் நிற்பவர். பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை கால் பதியாத இடமே இல்லை. அத்தனை எம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது விடுதலை பயணத்தில் தன்னை இணைத்துகொண்டவர்.