முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் சிறிலங்காவில் வெளிநாட்டு படைகள் தங்கு தடையின்றி பிரசன்னமாகலாம்

264

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் கூட்டிணைந்து முன்வைத்துள்ள பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் சிறிலங்காவில் வெளிநாட்டு படைகள் தங்கு தடையின்றி பிரசன்னமாகலாம் என்று ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார்.

நிறைவேற்றப்படும் பிரேரணை தமிழ் மக்களின் விடயங்களுக்கு பொறுப்பு கூறுவதற்கானது என்று விம்பப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்து சிறிலங்காவின் கேந்திரஸ்தானத்தினை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தி பூகோள ரீதியான சீன எதிர்ப்பினை முன்னெடுப்பதே இலக்காகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், சிறிலங்கா அரசாங்கம் பிரேரணையை நிராகரிப்பதாக தொடர்ச்சியாக கூறிவருகின்றது.

உண்மையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அப்பிரேரனை பெயிரிட்டு அறிவிக்கப்பட்டதும் இலங்கையின் சார்பில் உறுப்புரிமை கொண்ட நாடொன்று வாக்கெடுப்பினைக் கோர வேண்டும்.

அவ்வாறு கோராது நிராகரிப்பதாக பூச்சாண்டி காண்பித்துக் கொண்டிருப்பதால் எவ்விதமான பயனுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *