பிலிப்பைன்சில், இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், டாவோ (Davao) மாகாணத்தில் உள்ள பொன்டகிடான் (Pondaguitan) பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 139 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும், இதனால், பல நகரங்களில், வீடுகள் ஆட்டம் கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.