மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருப்பது வெறும் கண்துடைப்பே என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனை வைத்து, ஐ.நா.வில் கதை அளப்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர், சிறிலங்கா அரசின் இவ்வாறான உக்திகள் குறித்து உலக நாடுகள் நன்றாக அறிந்து வைத்துள்ளன என்றும், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும் அதிகாரங்கள் பற்றியோ, அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் பற்றியோ இன்னமும் எதுவுமே கூறப்பட்டதாகத் தெரியவில்லை எனவும், அவர் மேலும் கூறியுள்ளார்.