புதிய பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் சமஷ்டி அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஆராய்வது தொடர்பாக பல உறுப்பினர்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்று அல்பேர்ட்டா தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச வானூர்தி நிலையங்களில் தொடர்ச்சியாக அதிகளவானர்கள் பயணங்களை மேற்கொள்வதை மையப்படுத்தியே இந்த விடயம் கவனம் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேநேரம் இந்த விடயத்தில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மிகுந்த கரிசனை கொண்டிருப்பதும் அண்மையநாட்களில் அவர் நேரடியாக ஆய்வுகளைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.