பெண்ணொருவரைத் துன்புறுத்திய குற்றச்சாட்டுக்களைக் கொண்டிருக்கும் நபர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
டஃபெரின் (Dufferin) பகுதியில் உள்ள பூங்காவொன்றில் மூன்று பெண்கள் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் அங்கு வருகை தந்திருந்த நபர் ஒருவர் அம்மூன்று பெண்களை பின்தொடர்ந்தாகவும் பின்னர் அவர்களை துன்புறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெண்கள் காவல்துறையினரிடத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.