பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் தொழிலாளர் சம்மேளனத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்க்கமான தீர்மானங்கள் எட்டப்படுமென மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பள விவகாரம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திடம், அரசாங்கத்தரப்புடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோதும் அது கைகூடவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான நவீன் திசாநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோர் கலந்துகொள்வார்களென தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்தல் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.