முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி

191

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அத்துடன், மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய மியன்மார் இராணுவம் தனது அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.

மியன்மாரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள இராணுவத் தலைவர்கள் அமெரிக்காவில் ஒரு பில்லியன் டொலர்கள் சொத்துக்களை கையாள்வதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் மீது பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத் தலைவர்களுக்கு பயனளிக்கும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை உடனடியாக முடக்க தனது புதிய நிர்வாகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.

இராணுவம் கைப்பற்றிய அதிகாரத்தை கைவிட்டு மியன்மார் மக்களின் விருப்பத்திற்கு மரியாதை அளிக்க வேண்டும்’ என்று மேலும் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *