முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மகாராஷ்டிரா தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு

186

மகாராஷ்டிரா மாநிலத்தில், பந்த்ரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில், 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

குறைமாத குழந்தைகள் மற்றும், பிறக்கும் போதே குறைபாடு உள்ள குழந்தைகள் சிகிச்சை பெறும், சிறப்பு சிகிச்சை பிரிவிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று, தீயை அணைத்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்தில் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறி சிகிச்சை பெற்ற 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 7 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *