முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தாங்கள் அனைவரும் எதிரிகளின் சதியில் வீழ்ந்து விட்டதாக கூட்டு எதிரணியினர் கவலை வெளியிட்டுள்ளனர்

654

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தாங்கள் அனைவரும் எதிரிகளின் சதி வலையில் மீளமுடியாமல் தவிப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தாங்கள் வேண்டாம் என்று கூறிய போதும், சிலர் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செய்த செயலினால் சில ஆண்டுகளாக கடின உழைப்பில் உருவாக்கிய தாமரை மொட்டு சின்னமும் அழிந்தது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் முடிந்தது – அரசாங்கமும் இல்லை – தாங்களும் முடிந்தோம் எனவும், தாங்கள் அனைவரும் எதிரியின் சதி வலையில் சிக்கி விட்டோம் என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சில தலைவர்கள் பொறுப்பு சொல்ல வேண்டும் என்றும் கடும் தொனியில் குமார வெல்கம திட்டித்தீர்த்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *