சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளை பங்களாதேசுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமர் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
பங்களாதேஷ் சுதந்திரப் பொன்விழா மற்றும் பங்களாதேசின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் 100ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்க சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிரியல் பாதுகாப்பு குமிழி பயண முறையில் மகிந்த ராஜபக்ச டாக்காவுக்கு செல்வதற்கு சிறிலங்கா சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.