மிசிசாகாவில் (Mississauga) நேற்றிரவு இடம்பெற்ற மகிழுந்து விபத்தில், 34 வயதுடைய சாரதி உயிரிழந்துள்ளார்.
நெடுஞ்சாலைச் சுவரின் மீது நேற்றிரவு 9.45 மணியளவில் மகிழுந்து மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை என்றும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மகிழுந்து சாரதி தொடர்பான அடையாளங்களையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.