மக்களை திசை திருப்புவதற்காக எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவி்க்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்களது ஆட்சியில், பொதுமக்களின் முறைப்பாடுகள் மீது உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் மக்களுக்கு தேவையான சிறந்த செயற்றிட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் எமக்கு எதிரானவர்கள், எம்மீது அவதூறுகளை கூறி களங்கம் ஏற்படுத்த முனைகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.