சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் (Riyadh ) உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து, எண்ணெய் ஆலையின் ஒரு பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதாக சவுதி அரேபிய அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், மசகு எண்ணெய் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது சவுதி அரேபியா குற்றம்சாட்டவில்லை.
அதேவேளை, ரியாத்தில் உள்ள எண்ணெய் ஆலை மீது 6 ஆளில்லா விமானங்கள் மூலம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக, யேமனில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.