தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அவனியாபுரத்தில் தைப்பொங்கல் தினமான 14ஆம் திகதி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
மறுநாள், பாலமேட்டிலும், 16-ம் திகதி அலங்காநல்லூரிலும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.