இந்தியப் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்களை, வழங்குமாறு, மத்திய தகவல் ஆணையம் விமானப்படைக்கு, பிறப்பித்த உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு தொடக்கம், தற்போது வரையான காலப்பகுதியில் இந்தியப் பிரதமரின் வெளிநாட்டு பயண விபரங்களை அளிக்கும்படி, ஓய்வுபெற்ற, கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா கேட்ட விபரங்களை அளிக்கும்படி, விமானப்படைக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
“இந்த தகவல்கள் மிகவும் இரகசியமானவை; இதை வெளியிடுவது, நாட்டின் இறையாண்மைக்கும், பிரதமரின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைக்கும் என்று, இந்த உத்தரவை எதிர்த்து, விமானப்படை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.