முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்படட மனித எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 239ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பல எலும்புக்கூடுகள் மீட்கப்படாத நிலையில் காணப்படுகின்றன

741

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் சில வாரங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் நாள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை 109 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் சரவணராஜாவின் மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரையில் 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலப்பகுதி விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், விரிவாக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதை அவதானிக்கக் கூடியாதாக உள்ளது.

அகழ்வு இடம் பெறும் இடத்தில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *