முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மறைந்தார் திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி மரியசேவியர் அடிகளார்

259

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி மரியசேவியர் அடிகளார் தனது 82ஆவது வயதில் காலமானார்.

யாழ்ப்பாணம்,இளவாலையைச் சேர்ந்த மரியசேவியர் அடிகளார், ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் அதன் பின்னர் சென். ஹென்றிஸ் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் தன் வாழ்வை குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பை கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார்.

1958 ஆம் ஆண்டு இசையியலில் உயர் பட்டம் பெறும் பொருட்டு ரோம் நகருக்குச் சென்று தனது 21 ஆவது வயதில் பி.ஏ.,எம்.ஏ பட்டங்களைப் பெற்றதுடன், உரோம் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 1960- 1961 ஆம் ஆண்டு காலம் பணிபுரிந்தார்.

கலாநிதி மரியசேவியர் அடிகளார் 1962 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி ரோம் நகரில் தனது 22 ஆவது வயதில் திருச்சபைச் சட்டத்தின்படி பரிசுத்த தந்தை 23 ஆம் அருளப்பரின் சிறப்பு அனுமதியுடன் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் பதினைந்து வயதில் எழுதிய “மலருந் தமிழகமே மறந்து விடாதே” என்னும் கட்டுரை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மலரில் வெளிவந்தது.

சிறுவயது முதல் நாடகங்களில் நடித்துவந்த இவர், 1966 ஆம் ஆண்டு உரும்பராயில் ‘திருமறைக் கலாமன்றம்’ என்ற அமைப்பை நிறுவி,காட்டிக்கொடுத்தவன், பலிக்களம், நல்லதங்காள், நெஞ்சக்கனல், நீ ஒரு பாதை, யூதகுமாரி முதலான பல நாடகங்களை உள்ளூரிலும் ஐரோப்பிய தேசங்களிலும் மேடையேற்றினார்.

மேலும் இந்த அமைப்பினூடாக 1990 ஆம் ஆண்டு “கலைமுகம்” என்னும் காலாண்டு கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக கடமையாற்றியதுடன், சிறிது காலம் ‘பாதுகாவலன்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *