முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மலைநீதியம்மன் கோயிலின் மடப்பள்ளி பௌத்த பிக்குவினால் எரிப்பு

1399

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின் மடப்பள்ளி பௌத்த பிக்கு ஒருவரினால் எரிக்கப்பட்ட சம்பவத்தினால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 10.30 மணியளவில் காவியுடை தரித்த நபர் கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று புகுந்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக கிராம உத்தியோகத்தர் கனகசுந்தரம் ஜெயரூபன் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதை அடுத்து சேருநுவர காவல்த்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்திருந்ததாகவும், அங்கு ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சேருநுவர ரஜமஹா விகாரையில் ஊழியம் செய்யும் ஒருவரை காவல்த்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீவைப்பினால் மடப்பள்ளி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கோயில் பொருட்கள் அனைத்தும் தீயினால் முற்றாக எரிந்தழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த அம்மன் கோயில் கடந்த 2009ஆம் ஆண்டும் பௌத்த பிக்கு ஒருவரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *