மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கான கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.
சிறப்பு கட்சித் தலைவர்கள் கூட்டம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றதுடன், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய கலப்பு மற்றும் விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை கட்சித் தலைவர்கள் ஒன்று கூடவுள்ளனர்.