முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டி

282

அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலும் இவ்விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் சுதந்திரக்கட்சி பங்காளியாக இருப்பதால், கூட்டணியாகத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்பதுடன் தேவையான இட ஒதுக்கீடுகள் கிடைக்காத பட்சத்தில் தனி வழி செல்வதே சிறந்தது எனவும் கருத்துகள்  குறித்த கூட்டத்தில் முன்வைக்கப்படுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *