முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

313

வவுனியா- செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர், யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக மாகாண கல்வித்திணைக்களத்தால் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்று அவர் கடமைகளை பொறுப்பேற்கவிருந்த நிலையில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர், எமது பாடசாலையில் ஏற்கனவே அதிபராக பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதுடன் பாடசாலையில் பல்வேறு முறைக்கேடான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

குறித்த அதிபரை மீண்டும் எமது பாடசாலைக்கு நியமித்து பாடசாலையின் அபிவிருத்தியில் வீழ்ச்சியை ஏற்ப்படுத்த வேண்டாம்.

எனவே இவருக்கு பதிலாக வேறு ஒரு அதிபரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்” என வலியுறுத்தியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *