கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ், சாதாரண தரப் பரீட்சைகள் மார்ச் முதலாம் திகதியில் இருந்து 11ஆம் திகதி வரையான 11 நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் நடைபெற வேண்டிய சாதாரண தரப் பரீட்சைகள், கொரோனா தொற்று அச்சுறுத்தலை அடுத்து, இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட நிலையில், மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.