இன்று அனைத்துலக பெண்கள் நாளாகும்.
உலகெங்கும் வாழும், பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம், போன்றவற்றை வலியுறுத்தும் வகையில், அனைத்துலக பெண்கள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரியும், சர்வதேச நீதியை வலியுறுத்தியும் போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், சமூகத்தின் பெண்களின் பங்களிப்பை போற்றும் வகையிலான பெண்கள் நாள் நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் தமிழீழப் பெண்கள் சரிநிகர் சமானமாக எதிரிகளுடன் போரிட்டு வரலாற்றைப் படைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.