கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 31-ம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ம் திகதி வரை அமுலில் உள்ளது.
இந்தநிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மார்ச் 31-ம் திகதி வரை நீடிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது“ எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.