மிசிசாகாவில் உள்ள கனடா தபாலக ஊழியர்கள் ஒரு தொகுதியினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறிப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஏறக்குறைய 350பேர் வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தொற்று நோய் இலக்கான ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.