மியன்மாரில் அதிகரித்து வரும் இராணுவ வன்முறைகளால் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் யாங்கூன் நகரங்களில் மட்டும் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் இதுவரையில் குறைந்தது 134 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.