தேர்தல் ஆணையத்தை மாற்றியமைத்து, மியான்மரில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவ தளபதி ஆங் ஹலேங் தெரிவித்துள்ளார்.
மியான்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இராணுவத் தளபதி மின் ஆங் ஹலேங், (Min Aung Hlaing) தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.
இதன்போது அவர் தேர்தலில் நடைபெற்ற மோசடியால் தான் இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது என்று தமது செயற்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார்.
தேர்தல் மோசடிகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க தவறி விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தை மாற்றியமைத்து, புதிதாக தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.