முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மீசாலையில் மாடு மேய்த்தவர் பாம்பு தீண்டி பலி

267

யாழ்ப்பாணம் –  தென்மராட்சி  மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாடு, கொண்டு சென்றவர், பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

மீசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய,  குமார் என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர், நேற்று சரசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டைக் கொண்டு சென்ற போது, புற்புதருக்குள் இருந்த பாம்பு தீண்டியுள்ளது.

அதனை அவர் கவனிக்காமல் இருந்த நிலையில்,  மாலையில் உடலில் மாற்றங்களை அடுத்து,  சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *