ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாளை மறுநாள் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அதேபோல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.