முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறிலஙகா படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு உடுப்புக்குளம்,மற்றும் உடையார்கட்டு, சுதந்திரபுரம், கைவேலி, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் மக்கள் மற்றும் பொதுமக்கள் வைத்திருக்கும் வணிக நிலையங்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மக்களின் வீடுகளுக்கும், வணிக நிலையங்களுக்கும் செல்லும் சிறிலங்கா படையினர், அங்கு குடும்பத்தலைவர் யார், எத்தனை அங்கத்தவர்கள், என்ன வேலை செய்கின்றார்கள் போன்ற விபரங்களைத் திரட்டிவருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
போர் முடிவடைந்துவி்டடதாக அறிவிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகியுள்ளதுடன், வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அனைத்து பாகங்களிலும் சிவில் நிர்வாகமே நடப்பில் உள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், சிறிலங்கா படையினரின் இநத நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் அச்ச உணர்வு தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.