முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றுமொரு தீவிரவாதக் குழு திட்டமிட்டுள்ளதாக காவல்துறை மா அதிபருக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது

548

இலங்கையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றுமொரு தீவிரவாதக் குழு திட்டமிட்டுள்ளதாக காவல்துறை மா அதிபருக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய பள்ளிவாசல்களை இலக்கு வைத்து மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தொழுகை நடைபெறும் தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, {ஹப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்காக உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன அறிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *